search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளக்காதலன் கொலை"

    இனிமேல் சந்திக்க வரவேண்டாம் என கூறியதால் கள்ளக்காதலனை உயிருடன் எரித்து கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே அண்ணன் பெருமாள் கோவில் மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில் என்ற சந்திரசேகர் (வயது 43). கொத்தனார். இவருடைய மனைவி பரிமளம். இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்தநிலையில் சீர்காழி அருகே காத்திருப்பு கிராமத்தை சேர்ந்த கருணாநிதி மனைவி செல்வி (45). சித்தாள் வேலை செய்து வரும் இவருக்கும், சந்திரசேகருக்கும் கட்டிட வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு செல்வி, சந்திரசேகர் வீட்டிற்கு வந்து இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.அப்போது சந்திரசேகர் என்னை பார்க்க பெண் வீட்டார் வருகிறார்கள். எனவே நீ இனிமேல் என்னை சந்திக்க வரவேண்டாம் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வி, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து சந்திரசேகர் மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து படுகாயமடைந்த சந்திரசேகரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புகாரின் பேரில் வைத்தீஸ்வரன்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர்.
    மகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை:

    சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    இதை தெரிந்துகொண்ட மஞ்சுளாவின் 10 வயது மகன் ரித்தேஷ் என்பவரை நாகராஜ், கடந்த மார்ச் மாதம் கடத்தி கொலை செய்தார். இந்த வழக்கு தொடர்பாக எம்.ஜி.ஆர். நகர் போலீசாரால் கைது செய்யப்பட்ட நாகராஜ் சமீபத்தில் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    இதையடுத்து, நாகராஜ் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 29-ந்தேதி மாலை கடைக்கு அருகே மர்ம கும்பலால் நாகராஜ் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    இதுதொடர்பாக, திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கூலிப்படை உதவியுடன் நாகராஜை கொலை செய்ய மஞ்சுளா ஏற்பாடு செய்ததும் தெரிய வந்தது.

    இந்நிலையில், நாகராஜ் கொலையில் தேடப்பட்டு வந்த மஞ்சுளா மற்றும் சூளைமேட்டை சேர்ந்த தினேஷ்குமார், அரும்பாக்கத்தை சேர்ந்த ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் உள்ளிட்ட 5 பேர் சென்னை ஜார்ஜ் டவுன் 7-வது நீதிமன்ற நீதிபதி பஷீர் முன்னிலையில் நேற்று சரணடைந்தனர். 5 பேரையும் 4-ந் தேதி வரை சிறையில் அடைக்கவும், அன்றைய தினம் திருவண்ணாமலை கோர்ட்டில் 5 பேரையும் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்த கொலை சம்பவம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    மகனை கொன்றவனை தீர்த்துகட்ட மஞ்சுளா முடிவு செய்தார். நாகராஜ் ஜெயிலில் இருந்து வெளியே வந்ததும் கொல்வதற்காக மஞ்சுளா துப்பாக்கி வாங்கினார். கடந்தவாரம் சைதாப்பேட்டை கோர்ட்டில் நாகராஜ் ஜாமீன் பெற மனுதாக்கல் செய்திருந்தார்.

    அப்போது நாகராஜ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. அவரை கொலை செய்வதற்காக கோர்ட்டுக்கு வெளியே துப்பாக்கியுடன் மஞ்சுளா காரில் காத்திருந்தார்.

    இதனையறிந்த நாகராஜ் தரப்பினர் அவரை சைதாப்பேட்டை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதுபற்றி போலீசாரிடம் தெரிவித்தனர். போலீசார் துப்பாக்கியுடன் காத்திருந்த மஞ்சுளாவை கைது செய்தனர்.

    அவரது துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மஞ்சுளாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கபட்டது. அவர் சைதாப்பேட்டை கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.

    மஞ்சுளா அவரது நண்பர் தினேஷ்குமார், ஷியாம்சுந்தர், சந்தோஷ்குமார், சரவணன் ஆகியோர் மூலம் நாகராஜை கொலை செய்ய திட்டம் தீட்டினார். கடந்த 24-ந்தேதி திங்கட்கிழமை நாகராஜ் சென்னையில் இருந்து பஸ்சில் திருவண்ணாமலைக்கு வந்தார். அதே பஸ்சில் தினேஷ்குமார் உள்ளிட்ட 5 பேர் வந்தனர்.

    திருவண்ணாமலை ராமலிங்கனார் தெருவில் உள்ள வீட்டிற்கு நாகராஜ் சென்றார். அங்கும் கும்பல் சென்றது.

    பின்னர் நாகராஜ் அய்யங்குள தெருவில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். அவரை பின் தொடர்ந்த கும்பல் ஒரு நாள் முழுவதும் அவரை நோட்டமிட்டனர். மதிய நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அறிந்து அந்த நேரத்தில் கொலையை அரங்கேற்ற திட்டமிட்டனர்.

    திருவண்ணாமலையில் இருந்து சென்னை திரும்பிய கும்பல் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலைக்கு சென்றனர்.

    நாகராஜை கொலை செய்து விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பினர். கிளிப்பட்டு என்ற இடத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு பஸ்சில் வந்தவாசி சென்றுள்ளனர்.

    அங்கிருந்து புதுச்சேரி சென்று தங்கிவிட்டு சென்னை சென்றுள்ளனர். அங்கு அவர்கள் கோர்ட்டில் சரணடைந்தனர்.

    திருவண்ணாமலை டவுன் போலீசார் 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகே கொலையில் மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும்.

    மகனை கொலை செய்த கள்ளக்காதலனை கூலிப்படை உதவியுடன் தாய் கொலை செய்து பழிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தகராறில் கள்ளக்காதலனை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு ஜாமீனில் வந்து தலைமறைவான பெண் 5 ஆண்டுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கேரளா மாநிலம் எர்ணாக்குளம் அடுத்த களம்பஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 45). இவர் முதல் கணவனை விட்டு விட்டு அதே பகுதியைச்சேர்ந்த ஏற்கனவே திருமணமான கார்த்திகேயன்(51) என்பவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டார்.

    பின்னர் அவர்கள் கடந்த 2010-ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அடுத்த பாப்பான்குப்பத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர்.

    இந்த நிலையில், கள்ளக்காதலி மணிமேகலையின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன் தகராறில் ஈடுபட்டார். 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி ஏற்பட்ட மோதலின் போது மணிமேகலை, கத்தியால் குத்தி கள்ளக்காதலன் கார்த்திகேயனை கொலை செய்தார்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்குபதிவு செய்து மணிமேகலையை கைது செய்தனர். 2013-ம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த மணிமேகலை, தலைமறைவாகி விட்டார். அவர் கேரளா சென்று தனது முதல் கணவருடன் வசித்து வந்தது தெரிந்தது. இதற்கிடையே மணிமேகலையை கைது செய்ய திருவள்ளூர் நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்தது.

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் மேற்பார்வையில் இன்ஸ் பெக்டர் பரிபூரணம் சப்-இன்ஸ் பெக்டர்கள் சபாபதி, சுரேஷ் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கேரளா சென்று கடந்த 5 வருடங்களாக தலை மறைவாக இருந்து வந்த மணிமேகலையை கைது செய்தனர். பின்னர் அவரை கும்மிடிப் பூண்டிக்கு அழைத்து வந்தனர்.

    ×